கொரோனா மூலம் இயற்கை நமக்கு உணர்த்துவது என்ன..?

கண்டிப்பாக! இந்த கொரானா மூலமாக அல்ல இதற்க்கு முன்னரும் பல முறை இயற்கை நம்மை எச்சரித்துள்ளது!

பல உறுதி படுத்தப்படாத தகவல்கள் இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்துதான் மனிதருக்கு பரவியது என கூறுகின்றன!

ஓவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு வைரஸ்களினால் உண்டான நோய் மனித குலத்தை தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன!

அதில் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் பெரும்பாலான நோய்களுக்கு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ இல்லை! ஒரு சில நோய்களுக்கு மட்டுமே தடுப்பூசிகளும் மருந்துகளும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டன! பிற வைரஸ் நோய்கள் இயற்கையால் தானாக கட்டுபடுத்தப்பட்டன! (அழிக்கப்படவில்லை).

வேரியோலா வைரஸ்

இந்த வைரஸ் மூலம் பெரியம்மை என இங்கு அழைக்கப்படும் நோய் உருவாகிறது! இது ஒரு கொடிய நோய்! இந்த வைரஸ் நோய்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை! தடுப்பு மருந்துகள் மட்டுமே உள்ளன!

வரலாற்றின் பக்கத்தை திருப்பிபார்த்தால் இந்த நோயின் பலி எண்ணிக்கை பல கோடிகளைத்தாண்டும்! கடந்த 1990 வரைகளில் மட்டுமே சுமார் 6 லட்சம் குழைந்தைகள் இறந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன! இது ஒரு பரவக்கூடிய நோய்! இந்த நோயை உருவாக்கும் வைரஸ் முழுவதுமாக அழிக்கப்பட்டது என கூறப்பட்டாலும்! ஆண்டுக்கு 5000 பேர்வரை இந்திய அளவில் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது!

இது போலவே அடுத்தடுத்ததாக சின்னம்மை ( ChickenPox) தட்டம்மை (measles) என அடுத்தடுத்து மனித குலத்தை தாக்கின!

எபோலா (Ebola V)

இதுவரை கண்டறியப்பட்ட நோய் உண்டாக்கும் வைரஸ்களில் மிக கொடூரமான வைரஸ் இது!

1975 - ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சுமார் 12000 பேர் இந்த நோய் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன! இறப்பு விகிதம் மற்ற நோய்களைக்காட்டிலும் குறைவாக இருந்தாலும் இது கொடிய நோயாகா பார்க்கப்பட காரணம் இந்த நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் உடலின் மிகுந்த வலியுடன் உடலின் வெளி மற்றும் உட்புறம் இரத்தப்போக்கு ஏற்பட்டு துடிதுடித்து இறப்பார்!

இந்த எபோலா வைரஸ் நோய்க்கு இதுவரை எந்த ஒரு மருந்தும் தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

சிக்கா வைரஸ் (Zika Virus)

இந்த வைரஸ் முதலில் குரங்கிடம் இருந்து கொசுவுக்கு பின்னர் கொசுவிடம் இருந்து மனிதருக்கும் பிறகு மனிதருக்கே நேரடியாக பரவுகிறது,

இது மிகப்பெரிய உயிர் இழப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், கர்பினி பெண்களில் பிறக்கப்போகும் குழந்தைகளில் மிக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது!(

இன்பூளுன்சா (Influenza virus) or (H1N1 Flu)

இது 1918 - ஆம் ஆண்டு இது முதன் முதலில் கண்டறியப்பட்டது! இதுவும் மிக கொடிய நோய் உண்டாக்கும் வைரஸ்தான்! அப்போதைய கால கட்டத்தில் சுமார் 50 கோடி மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர்! அதில் சுமார் 5 கோடி பேர் இறந்தும் போயினர் அதன் பிறகு இயற்கையின் மூலமாக இந்த நோய் கட்டுக்குள் வந்தது!

சமீபத்தில் 2009 - ல் இது தாக்கி மீண்டும் பல உயிர் சேதத்தை ஏற்படுத்தியது! 18000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்!

இதுபோல வரலாற்றில் இன்னும் நிறைய வைரஸ் நோய்கள் உள்ளன!

  • The Black Death: 1346-1353
  • Cocoliztli epidemic: 1545-1548
  • Great Plague of London: 1665-1666
  • Great Plague of Marseille: 1720-1723
  • American polio epidemic: 1916
  • Asian Flu: 1957-1958
  • AIDS pandemic and epidemic: 1981-present day
  • Chikungunya
  • Cholera
  • Lassa Fever
  • Crimean-Congo Haemorrhagic Fever
  • Hendra Virus Infection
  • Marburg Virus Disease
  • MERS-CoV
  • Monkeypox
  • Nipah Virus Infection
  • Rift Valley fever
  • SARS
  • Tularaemia
  • Yellow fever

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்! மேலே சொல்லப்பட்ட வைரஸ் நோய்கள் யாவும் அழிக்கப்படவில்லை! கட்டுப்படுத்தப்பட்டுள்ளன! அல்லது இயற்கையாக பாவம் பார்த்து கட்டுப்படுத்திய வைரஸ் நோய்கள்!

மேலே உள்ள நோய்களில் 70% - 80% நோய்களுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை, கண்டுபிடிக்கப்படவில்லை! அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன!

இந்த நோய்கள் பெரும்பாலும் மிருகங்களிடம் இருந்தே ஏதோ ஒரு வகையில் மனிதரை தாக்குகின்றன!

இயற்கையை நாசம் செய்தல், பணத்திற்காக மற்றும் உணவிற்காக பிற உயிர்களை நாசம் செய்தல்! தனக்காக மட்டும் இந்த உலகம் என எண்ணி அனத்து உயிர்களின் வாழ்வாதாரத்தை அழித்தல்! காடுகளை அழித்து நகரமயமாக்கி, சாலைகள் அமைத்து மிருகங்கள் மற்றும் பிற உயிர்களை அழித்தல், இயற்கை வளங்களை பணத்திற்காக அழித்தல்!

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு முரணான காரியங்கள் செய்தல் என மனிதன் செய்த அட்டூழியங்கள் ஏராளாம்! இயற்கையுடன் ஒன்றினைந்து வாழ்வது என்பது தற்போது முற்றிலும் இல்லாமல் போனது!

மனிதன் இந்த உலகம் அவனுக்கு மட்டுமானது என்ற என்னத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்! இந்த உலகில் உள்ள பல கோடி உயிரினங்களில் (மனித உயிர் தவிர) தானும் ஒரு உயிர் என்பதை உணர்ந்து இயற்கையோடு ஒன்றினைந்து வாழ வேண்டும்! பிற உயிர்களையும் இயற்கையையும் அழிப்பதை நிறுத்த வேண்டும்! இல்லை என்றால், இயற்கையானது அதன் இடத்தை மனித இனத்திடம் இருந்து மீட்டெடுப்பதற்கான இது போன்ற தீவிர வழிகளைக் கண்டுபிடிக்கும்!

Post a Comment

Previous Post Next Post